இலங்கையின் முதலாவது செய்மதி ராவணா-1 சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து தனது முதலாவது படத்தை அனுப்பிவைத்துள்ளது.
ஆர்தர் சி கிளார்க் நிலையத்தைச் சேர்ந்த, இலங்கை ஆய்வு விஞ்ஞானிகளான தரிந்து தயாரத்ன, துலானி சமிக்கா ஆகியோரால், ஜப்பானின் கையூஷூ தொழில்நுட்ப நிறுவனத்தினால் இந்த செய்மதி, வடிவமைக்கப்பட்டது.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் செயற்படக் கூடிய இந்தச் செய்மதி இலங்கை மற்றும் அயல் நாடுகளைப் படம் பிடிக்கக் கூடிய வசதிகளும் உள்ளன. இது 11.3 செ.மீ x 10 செ.மீ. x 10 செ.மீ அளவுடையதும், 1.05 கிலோ எடையுள்ளதும் ஆகும்.
இந்தச் செய்மதி கிழக்கு வேர்ஜினியா கடற்கரையில் உள்ள நாசாவின் வலூப் ஏவுதளத்தில் இருந்து அன்ராரஸ் ஏவுகணை மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி அதிகாலை 2.16